இயக்குநரை அப்சட் செய்த சூர்யா.. படப்பிடிப்பில் நடந்த ஷாக்கிங் சம்பவம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடைய வில்லை.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் ரெட்ரோ. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கதையில் அதை மாற்றுங்கள், இதை மாற்றுங்கள் என தொடர்ந்து சூர்யா கூறி வந்தாராம். இதனால் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அப்செட் ஆகிவிட்டாராம்.
ஏற்கனவே புறநானூறு திரைப்படத்தில் இப்படி நடந்ததால் தான் படம் கைவிடப்பட்டது. அதே போல் இப்படத்திலும் சூர்யா நடந்து கொண்ட நிலையில், சூர்யாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் அட்வைஸ் செய்து இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என கூறியுள்ளாராம். இதன்பின் படப்பிடிப்பு சுமுகமாக முடிந்துள்ளது.