சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றும் பங்கர்? ஒருவேலை அவரா இருக்குமோ..
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் மற்ற முன்னணி பணியாளர்களுக்கு மட்டும் படத்தின் போது அட்வான்ஸ் தொகை கொடுக்கப்படும். பின் படம் முடிந்த பின் முழு தொகையையும் தயாரிப்பாளர்கள் கொடுப்பார்கள்.
ஆனால் வசன எழுதுவோர் உட்பட ஒருசில கலைஞர்களுக்கு அட்வான்சும் கொடுப்பதில்லை சம்பளம் பாக்கியும் கொடுப்பதில்லை. அப்படி தயாரிப்பாளர்கள் எங்களை இழுத்தடிக்கிறார்கள் என எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ் குறிப்பிட்டு திட்டியுள்ளார்.
சினிமாவில் சம்பள பாக்கி வைத்திருக்கும் அனைவரும் சொல்லி வைத்ததுபோல் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஜெய்பீம் போன்ற படங்கள் வரும்போது தான். விளம்பரம், எல்லாமே நியூஸ்பேப்பரில் பெயர் வருகிறது என்பது மட்டுமே. நடன ஆசாமி. பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கும் பங்கர் உட்பட சம்பள பாக்கி.
24 மணி நேர நிறுவனத்தின் அப்ஸ்காண்டிங் ப்ரொட்யூசர் உட்பட எல்லோருமே சம்பள பாக்கி கொடுக்காமல் ஜாலியாக இன்டர்வ்யூ கொடுக்கின்றனர் என ஆதங்கமாக கூறி ஒரு கட்டுரையும் எழுதி வெளியிட்டுள்ளார் கருந்தேள் ராஜேஷ்.