4 கண்டீஷன் போட்டும் மாப்பிள்ளை கிடைக்கல..ஆனா..!! நடிகை கஸ்தூரி..

Kasthuri Tamil Actress Actress
By Edward Jun 22, 2025 02:30 AM GMT
Report

கஸ்தூரி

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முக்கிய நடிகையாக இருந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை கஸ்தூரி, திருமணமாகி 2 குழந்தைகள் பெற்று வெளிநாட்டில் செட்டிலானார்.

4 கண்டீஷன் போட்டும் மாப்பிள்ளை கிடைக்கல..ஆனா..!! நடிகை கஸ்தூரி.. | Kashturi Open About Why Quit Cinema After Marriage

அதன்பின் மீண்டும் தமிழ் படங்களிலும் சீரியலிலும் நடிக்க ஆரம்பித்தார். அரசியலிலும் ஈடுபட்டு வரும் நடிகை கஸ்தூரி, தன் மகள் 7 வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக கூறியிருந்தார். தற்போது தான் சினிமாவில் இருந்து 7 ஆண்டுகள் விலக காரணம் என்ன என்பதை தெரிவித்துள்ளார்.

கண்டீஷன்

அதில், வீட்டில் பார்த்து வைத்த டாக்டரை தான் திருமணம் செய்து கொண்டேன். கணவர் மற்றும் அவர் வீட்டில் இருப்பவர்களுக்கு சினிமா பிம்பம் கொஞ்சம் பிடிக்காமல் இருந்தது. என்னைத்தாண்டி என் கணவர் மற்றும் குழந்தைகளை சில விசயங்கள் பாதிக்கும், அதனால் தான் அடக்கி வாசித்தோம். 4 வருஷமா எங்க ஊரு மாப்பிள்ளைத்தான் வேண்டும் என்று என் அப்பா - அம்மா தேடுனாங்க, ஆனா கிடைக்கல. மாப்பிள்ளை விஷயத்தில் 4 கண்டீஷன் வைத்திருந்தேன்.

4 கண்டீஷன் போட்டும் மாப்பிள்ளை கிடைக்கல..ஆனா..!! நடிகை கஸ்தூரி.. | Kashturi Open About Why Quit Cinema After Marriage

அதில், சைவமாக இருக்கணும், தோல் பேக்லாம் வாங்கமாட்டேன், பட்டுப்புடவை வாங்கமாட்டேன். அதன்பின் குடிக்க கூடாது, 3வது சிகரெட் பிடிக்கக்கூடாது. 4வது இந்தியாவில் மாப்பிள்ளை வேண்டும், சினிமா பிடித்தவரா இருக்கணும். இதை ஏதாவது ஒன்று விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

அதனால் நடிப்பை விட்டு விட்டு சினிமாவில் இருந்து விலகி கல்யாணம் செய்தேன். நான் பப்புக்கு எல்லாம் செல்லமாட்டேன், நான் பிடிவாதக்காரி, சோப்பு பயன்படுத்தி 4 வருடமாகிறது, ஆர்கானிக் பொருளை தான் பயன்படுத்தினேன். நடிப்பைவிட்டேனே தவிர, பல படங்களை விநியோகம் செய்தோம் என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.