ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட எல்லைகள் உள்ளன.. நடிகை கயாடு லோஹரின் வெளிப்படை பேச்சு
Kayadu Lohar
By Karthick Raja
வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான கயாடு லோஹரின் சமீபத்திய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பேசியது, "படப்பிடிப்பில் எனக்கு உடன்பாடில்லாத ஆடை அல்லது காட்சிகள் இருந்தால் இயக்குநர், படக்குழுவினரிடம் வெளிப்படையாக பேசிவிடுவேன். ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட எல்லைகள் உள்ளன.

அவை மதிக்கப்பட வேண்டும். திறந்த உரையாடலே பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான பணி சூழலை உருவாக்கும். எனவே நம்முடைய எல்லைகளில் உறுதியாக இருப்பதும், நம் கவலைகளை தெரிவிப்பதும் மிகவும் முக்கியம்" என கூறியுள்ளார்.