கல்யாணத்துக்கு பின் ஆண்கள் அதை செய்யலாம் பெண்கள் செய்யகூடாதா? வெளுத்து வாங்கிய நடிகை கீர்த்தி பாண்டியன்..
நடிகர் அருண் பாண்டியன் மகளாக தமிழ் சினிமாவில் தும்பா படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி பாண்டியன். அதன்பின் அன்பிற்கினியாள் என்ற படத்தில் அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து நடித்தார். சமீபத்தில், நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்திருந்தார். தற்போது கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கண்ணகி படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
மேலும் அவரது கணவர் நடிப்பில் சபா நாயகன் படமும் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. கண்ணகி படத்தின் பிரஸ் மீட்டில் பயில்வான் ரங்கநாதன், ஏடாகுடமாக உள்ளே புகுந்து கீர்த்தி பாண்டியனிடம் கேள்வி கேட்டார். வீட்டில் தான் சண்டை, ஒரே நாளில் படம் ரிலீஸ் ஆவதிலும் சண்டை, வீட்டுக்காரர் படம் பார்த்தாரா என்ன சொன்னார் என்றெல்லாம் கேட்டிருந்தார்.
அதற்கு கீர்த்தி பாண்டியன் என் வீட்டில் வந்து நீங்க பார்த்தீங்களா? எப்போது சண்டை வந்தது? என்று பங்கமாக பதிலளித்ததால் எஸ்கேப் ஆகியிருக்கிறார் பயில்வான். இதனை தொடர்ந்து வேறொரு பேட்டியொன்றில், திருமணமாகிவிட்டதால் தொடர்ந்து இனிமேல் படத்தில் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

விமான நிலையத்தில் இப்படியா!! துண்டுபோல் இருக்கும் மேல் ஆடையில் கவர்ச்சி காட்டி மிரட்டும் நடிகை வேதிகா..
அதற்கு அவர், நடிப்பும் ஒரு தொழில், இதை மட்டும் கல்யாணம் ஆகிட்டா செய்யக்கூடாதா? திருமணமான பின் தொடர்ந்து நடித்தால் என்ன பிரச்சனை? இந்த கேள்வியை அசோக் செல்வனிடம் கேட்க முடியுமா என்றும் ஆண்கள் திருமணம் செய்துவிட்டு நடிக்கலாம் ஆனால் நடிகைகள் மட்டும் நடிப்பது என்ன பிரச்சனை இருப்பதாக பார்க்கிறீர்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.