10 நாள் என் பக்கத்தில் கூட கணவர் வரவில்லை.. ஓப்பனாக உடைத்த கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவிலும் அறிமுகம் ஆனார்.
ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை. பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தனது 15 வருட காதலர் ஆண்டனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் இரண்டு முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்தது.
கீர்த்தி சுரேஷ் ஓபன்
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " ஆண்டனியிடம் முதலில் நான் தான் காதலை சொன்னேன், எங்கள் காதலை ரகசியமாக வைக்க நிறைய கஷ்டப்பட்டோம்.
நான் நடித்த படங்களில் அவருக்கு மகாநடி, சாணிக்காயிதம், ரகுதாத்தா உள்ளிட்ட படங்கள் மிகவும் பிடிக்கும். அதில் குறிப்பாக சாணிக்காயிதம் படத்தின் ஜானரை அவர் விரும்பினார், அந்தப் படத்தை பார்த்துவிட்டு என் பக்கத்தில் கூட பத்து நாட்கள் வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.