சின்மயி ஒத்த கால் செருப்போடு முகம் சிவந்து ஓடிவந்தா!! கொந்தளித்து பேசிய தாயார்..
சின்மயி - வைரமுத்து
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் பல பாடல்களை பாடி அசத்தி வந்தவர் பின்னணி பாடகி சின்மயி. வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை முன்வைத்த சின்மயிக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.
லியோ படத்தில் திரிஷா குரலுக்கு சின்மயியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டப்பிங் செய்ய வைத்தார். இந்த விஷயம் பெரியளவில் பேசப்பட்டது. இதனைதொடர்ந்து தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடலை ஆடியோ லான்ச்சில் ஏ ஆர் ரஹ்மான், சின்மயியை பாட வைத்தார்.
கட்டிப்பிடித்து அணைக்கும் போது
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், அவர் என்னை கட்டிப்பிடித்து அணைக்கும் போது, இது என்னமோ தப்பா இருக்கேன்னு கையும் ஆடவில்லை காலும் ஆடவில்லை, ஒரு நிமிடத்தில் நின்றுவிட்டேன். என் மூளை வேளை செய்யவில்லை.
பின் பதறியடித்து ஓடிவிட்டேன். என் அம்மா கீழே இருந்தாங்க. என் அம்மா கீழே இருந்தும் அந்த ஆளும் அதை செய்தார். அம்மா என்னை தனியா விடமாட்டாங்க, மேலே தானேன்னும் இருந்துட்டாங்க. உன் கேரக்டர் என்னன்னு டெஸ்ட் பண்றாரோ என்னவோ, இவங்க பெரிய ஆளுங்க, எது சொன்னாலும் கொலை பண்ணிட்டு கூட போய்டுவாங்க என்று சொன்னாங்க என்று சின்மயி வெளிப்படையாக கூறியிருந்தார்.
சின்மயி தாயார்
இதுகுறித்து சின்மயின் தாயார் அளித்த பேட்டியில், என் மகளிடம் உனக்கு தேசிய விருதுக்கு சிபாரிசு செய்யப்போகிறோம், ஃபார்மில் கையெழுத்து போடவேண்டும் என்று வைரமுத்து கூப்பிட்டார். நாங்கள் சென்றோம், நான் காரை பார்க்கிங் செய்துவிட்டு வந்தேன். சின்மயி ஒத்த கால் செருப்போடு முகம் சிவந்து ஓடிவந்தா.
என்ன ஆச்சின்னு கேட்டதும், வைரமுத்து கட்டிப்பிடுச்சி முத்தம் கொடுத்துட்டாரு என்று சொன்னா. உடனே காரை எடுத்து என் வீட்டிற்கு வந்தேன். இந்த சமயத்தில் பெண் குழந்தைகளை அப்போது கேட்கக்கூடாது என சின்மயி தாயார் கோபத்துடன் கூறியிருக்கிறார். இதைப்பற்றி சொல்லாதே என்று அவளிடம் சொன்னேன், மீடூ வந்ததும் நானும் பாதிக்கப்பட்டேன் என்று சின்மயி சொல்லிட்டாள்.