வெளியில் தலைக்காட்டாத பானுப்பிரியாவின் நிலை இதான்!! நடிகை குஷ்பூ சொன்ன உண்மை..
பானுப்பிரியா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக 80, 90களில் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை பானுப்பிரியா. அழகு, நடிப்பு, அபிநயம், பரதநாட்டியம் என்று அனைத்திலும் தன்னுடைய திறமையால் முன்னேறியவர் பானுப்பிரியா.

தன்னுடைய காந்தக்கண்கள், முகபாவனைகளால் ரசிகர்கள் மனதை ஈர்த்த அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக அமையவில்லை.
அவர் வாழ்க்கை குறித்து நடிகை குஷ்பூ சில விஷயங்களை பகிர்ந்து பகீர் கொடுத்துள்ளார்.

ரீயூனியனுக்கு அழைத்தோம்
எந்த நிகழ்ச்சிக்கு வருவதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பூ, நாங்கள் பானுப்பிரியாவை 2, 3 முறை ரீயூனியனுக்கு அழைத்தோம், ஆனால் அவர் வரவில்லை. அவர் யாருடனும் அவ்வளவு எளிதாக பழகமாட்டார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட தனியாகத்தான் இருப்பார். சினிமாவில் பானுப்பிரியாவின் நண்பர்கள் யார் என்று கேட்டால் யாருமில்லை என்றுதான் கூறமுடியும். அவர் எப்போதும் எல்லோரிடம் இருந்தும் சற்று விலகியே இருப்பார் என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.

இது திரையுலக ரசிகர்களை சற்று சோகத்திலும்
ஆழ்த்தி இருக்கிறது. இதற்கு காரணம்,
பானுப்பிரியாவின் வாழ்க்கையில் பல சவால்கள்
இருந்ததாகவும், திருமண வாழ்க்கை, வெளிநாட்டு
வாழ்க்கை, உடல்நல பிரச்சனைகள் உள்ளிட்ட பல
காரணங்களால் அவர் மனரீதியாகவும்,
உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக திரையுலக
பிரபலங்கள் கூறியிருப்பது தான் அந்த அதிர்ச்சிக்கு
காரணம்.