60 வயதை தாண்டியும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம்!! நடிகை கோவை சரளா..
கோவை சரளா
ஆச்சி மனோரமாவிற்கு பின் தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக திகழ்ந்து தற்போது தன்னுடைய குணச்சித்திர நடிப்பால் அனைவரையும் மிரம்மிக்க வைத்து வருபவர் கோவை சரளா.
இவரின் இடத்தினை இதுவரை யாரும் நிரப்பவில்லை என்பதுதான் உண்மை. அப்படி இருக்கும் நடிகை கோவை சரளா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஏன் திருமணம் செய்யவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். தனக்கு நான் சகோதரிகளும் ஒரு சகோதரனும் இருக்கிறார்கள்.
ஏன் திருமணம் செய்யவில்லை
அவர்களின் திருமணத்தை முடித்து அவர்கள் பிள்ளைகளை எல்லாம் வளர்ந்து ஒருநிலைக்கு வந்தபோது, நான் திரும்பி பார்க்கும் சமயத்தில் எனக்கு வயதாகிவிட்டது. பின் என் சகோதரிகளின் குழந்தைகள், என் குழந்தைகள் என்று நான் வாழ பழகிக்கொண்டேன்.
திருமணம் ஆகி குழந்தைகள் பெற்றுக்கொண்ட பல பெற்றோர்கள் இன்று அந்த குழந்தைகள் கைவிட்டதால் தனியாக தங்களது வாழ்க்கையை கடத்தி வருகின்றனர், எனக்கு யாரையும் சார்ந்து வாழ பிடிக்கவில்லை என்று தன்னுடைய மறுப்பக்கத்தை பகிர்ந்து வியக்க வைத்திருக்கிறார்.