காணாமல் போன கேஎஸ் ரவிக்குமார்! ரெண்டு ரஜினி படத்தால் ஏற்பட்ட மாற்றம்..
தமிழ் சினிமாவில் ஒருகாலகட்டத்தில் இந்த இயக்குநர் தான் நமக்கு செட்டாகும் என்று கூறும் அளவிற்கு இருந்து தற்போது அவரை ஒதுக்கி வைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அந்த இயக்குநர் வேறு யாருமில்லை நம்ம இயக்குநர் கே எஸ் ரவிகுமார் தான். பல இயக்குநருக்கு ரோல் மாடலாக இருக்கும் ரவிகுமார், கமல், ரஜினி படங்களை தான் அதிகளவில் இயக்கி உள்ளார்.
அந்த சமயத்தில் இவர் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன், முத்து, படையப்பா, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தெனாலி, மின்சார கண்ணா என பல வெற்றி படங்களால் சிம்மாசம் பெற்றார். ஒரு உச்ச இயக்குனராக வலம் வந்த கே.எஸ்.ரவிக்குமார் இறுதியாக கூட ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தை இயக்கி இருந்தார். இப்படம் நல்ல வசூல் பெற்றது.
ஆனால் படத்தை தயாரித்தவர்களே வெளியிடாமல் பல கை மாறி படம் வெளியானதால் தியேட்டருக்கு வந்த போது படத்தின் விலை பல மடங்கு உயர்ந்து ஒரு சிலருக்கு நஷ்டத்தை கொடுத்தது. அந்த சமயத்தில் தொடர்ந்து லிங்கா, கோச்சடையான் என ரஜினியின் படங்கள் தோல்வி அடைந்ததால், ரஜினி கபாலி, காலா என அவர் ரூட்டை மாற்றி பயணம் செய்ய தொடங்கினார். அதன் பின்னர் ரஜினி கே.எஸ்.ரவிக்குமாரை கண்டு கொள்ளவே இல்லை.
அதேபோல் கமல், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களும் இவரை கைகழுவியதால் படங்களை இயக்குவதை தவிர்த்து தற்போது நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வரும் பல இயக்குனர்கள் இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.