நடுராத்திரி 12 மணிக்கு புகைப்படத்தை மாற்றிய 50 வயது கடந்த நடிகை! கணவர் மகளுடன் எடுத்த செல்ஃபி..
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக 80 மற்றும் 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. முன்னணி இயக்குநர்கள் நடிகர்கள் படத்தில் நடித்து வந்த நடிகை குஷ்பு 90ஸ் கிட்ஸ்களுக்கு கனவுக்கன்னியாக இருந்து பெரிய பிராண்ட்டை கொடுத்தார்.
தற்போது, 50 வயதான் நடிகை குஷ்பு இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து இரு பெண் பிள்ளைகளுடன் அரசியலையும் பார்த்து வருகிறார். சின்னத்திரையில் நடித்தும் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்தும் வரும் குஷ்பு குடும்பத்தினருடன் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் ஆக்டிவாக இருந்து வெளியிட்டு வருகிறார்.
தற்போது இரவு நேரத்தில் அதுவும் நள்ளிரவு 12 மணிக்கு கணவர் சுந்தர் சி மற்றும் அவந்திகா, அனந்திகா மகள்களுடன் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த குஷ்பு ரெடி என்று இரண்டாம் மகள் அனந்திகாவை பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
My small world ❤️ #NewProfilePic pic.twitter.com/Zuv8WB0Pd4
— KhushbuSundar ❤️ (@khushsundar) April 18, 2021