4 பேருக்கு நடுவே தான் ஆடை மாற்றினேன்.. நம்பிக்கை தான்!! ஓப்பனாக பேசிய நடிகை குஷ்பூ..
தென்னிந்திய சினிமாவில் 80, 90 காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. தற்போது குணச்சித்திர நடிகையாகவும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பணியாற்றி வருகிறார் நடிகை குஷ்பூ. முன்னணி நடிகர்களுடன் நடித்த குஷ்பூ, இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து இரு பெண் பிள்ளைகளுக்கு தாயானர்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சினிமாத்துறையில் தான் பட்ட சில கசப்பான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அப்போ எல்லாம் இப்போது இருக்கும் கேரவன் எல்லாம் கிடையாது. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு தயராக உடைகளை மாற்ற நம்முடன் இரு லைட் மேன்கள், இரு ஒப்பனை கலைஞர்களை அனுப்புவார்கள். நான்கு பேரும் கையில் ஒரு பெரிய துணியை வைத்து என்னை மறைத்துக்கொள்வார்கள்.
நான் உள்ளே ஆடையை மாற்றுவேன், என்னை சுற்றி 4 பேர் இருந்தாலும் எனக்கு பயமில்லை, ஏனென்றால் அவர்கள் ஏற்படுத்திய நம்பிக்கை தான். அப்போது செல்போன் கிடையாது என்பதால் பயம் இல்லை, ஆனால் இப்போது பயம் இருக்கிறது. மேலும், அம்பாசிட்டர் காருக்குள் சென்று தான் துணையை மாற்றுவோம்.
கார் முழுதும் துணியால் மூடப்பட்டு கார் டிரைவர் வெளியில் நின்று யாரையும் இந்த பக்கம் வராமல் தடுப்பார். அந்த நம்பிக்கை தான் நிம்மதியாக பணியாற்ற உதவியதாகவும் கேரவன் இன்றைக்கு வந்தாலும் முந்தைய காலத்தில் இதுபோன்ற சூழலை சந்தித்ததால் தான் இப்போது கேரவன் வந்துள்ளது என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.