மறைந்த ஸ்ரீதேவியை 10 வயதில் ஆடையில்லாமல் நிற்கச்சொன்ன இயக்குனர்!! உண்மையை உடைத்த நடிகை..
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த ஸ்ரீதேவி இந்தியாவில் பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு துபாய்யில் மர்மமான முறையில் மரணமடைந்தது இந்திய சினிமாவையே அதிரவைத்தது. இந்நிலையில், நடிகை லட்சுமி சிறுவயதில் நடிகை ஸ்ரீதேவி பட்ட துயரங்களை பகிர்ந்திருக்கிறார்.
ஒரு படத்தில் எனக்கும் நடிகர் ஜெய்சங்கருக்கும் மகளாக ஸ்ரீதேவி 6 வயதாக இருக்கும் போது நடித்தார். அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அப்படம் நின்றுபோனது.
அதன்பின் காலம் ஓடி 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தயாரிப்பாளர் அப்படத்தினை எடுக்கலாம் என்றும் நீங்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுகொண்டார். அன்று ஷூட்டிங் ஆரம்பித்த போது ஸ்ரீதேவிக்கு 10 வயது.
பெண்ணாக மலரத்துவங்கும் வயதில் கிளைமேக்ஸ் காட்சி நடந்தது. அப்போது ஸ்ரீதேவியை மேலாடையில்லாமல் தலைகீழாகத் தொங்கவிடும் காட்சியாக இருந்தது. இதை கேட்ட ஸ்ரீதேவி என்னிடம், அக்கா எனக்கு சட்டை இல்லாமல் நிற்க ஒருமாதிரியாக இருக்கிறது என்று கெஞ்சிகேட்டாள்.
உடனே இந்த சீனை மாற்ற முடியாதா என்று சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டதற்கு அதெல்லாம் முடியாது கதையின் கண்ட்டினியூட்டி சீன் என்று சொல்லிவிட்டார்கள். அப்போது ஸ்ரீதேவியின் வேதனை, அவமானம் பிடுங்கித்தின்ன, உதவுகள் துடிக்க வேதையுடன் கண்ணீர் விட்டு நின்றாள்.
இதை அறிந்த ஸ்ரீதேவி அம்மா ராஜேஸ்வரி, தயாரிப்பாளரிடம் சென்று மன்னிச்சுக்குங்க சார் இந்த சீனில் என் மகள் நடிக்கமாட்டாள். இப்படி நடிச்சு பொழைக்கணும்னு அவசியமிலை என்று அவமானப்படுத்திவிட்டு சென்றுவிட்டார்.