மனைவி இறந்த 6 மாசத்துல 2வது கல்யாணம் ஏன்!! மதுரை முத்து ஓபன் டாக்..

Star Vijay Madurai Actors Tamil Actors
By Edward Mar 11, 2026 10:45 AM GMT
Report

மதுரை முத்து 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பட்டிமன்ற மேடைகள், நகைச்சுவை பேச்சுக்கள் என்று பல வழிகளில் ரசிகர்களின் மனதை ஈர்த்து பிரபலமானவர் தான் மதுரை முத்து. கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமாகி அதே நிகழ்ச்சியில் நடுவராகவும் திகழ்ந்தார்.

மனைவி இறந்த 6 மாசத்துல 2வது கல்யாணம் ஏன்!! மதுரை முத்து ஓபன் டாக்.. | Madurai Muthu Open First Wife S Death 2Nd Marriage

தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் மதுரை முத்து, முதல் மனைவி மரணத்திற்கு பின், 6 மாதங்களிலேயே இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் அப்போது அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன.

மனைவி இழப்பை சமாளிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இரு மகள்களை தனியாக வளர்ப்பதில் மிகப்பெரிய பொறுப்பாக இருந்ததால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன் என்று மதுரை முத்து கூறியிருந்தார்.

சமீபத்தில் தன்னுடைய இரு மகள்களில் மஞ்சள் நிராட்டு விழாவை சிறப்பாக கொண்டானார். இரண்டாம் திருமணத்தை 6 மாதங்களில் செய்ததால் விமர்சனங்கள் எழுந்தது குறித்து மதுரை முத்து சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

மனைவி இறந்த 6 மாசத்துல 2வது கல்யாணம் ஏன்!! மதுரை முத்து ஓபன் டாக்.. | Madurai Muthu Open First Wife S Death 2Nd Marriage

மனைவி இறந்தவுடனே கல்யாணம்

அதில், என் மனைவி இறந்த 6 மாதத்துக்குள்ளே நான் கல்யாணம் பண்ணிட்டியே என்று பலரும் கேட்டார்கள். என்ன மனைவி இறந்தவுடனே கல்யாணம் பண்ணிட்டீங்களே ற்னும் கேட்டார்கள். ஆனால் அந்த நிலையில் இருவர்களுக்கு தான் அது எவ்வளவு கஷ்டன் என்று புரியும். எனக்கு இரு பெண் குழந்தைகள் இருக்காங்க, பெண் குழந்தைகளை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம்னு எல்லாருக்கும் தெரியும்.

மனைவி இறந்தப்பின் எனக்கு ஒரு மனைவி தேவைப்படாமல் இருக்கலாம், ஆனால் என் வீட்டுக்கு ஒரு மனைவியும், என் குழந்தைகளுக்கு ஒரு அம்மாவும் தேவை. அந்த இடத்தில் இருந்து பார்த்தால்தான் அந்த வலி புரியும். பள்ளிக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கலாம், ஆனால் ஒரு அம்மா பாசம் யார் கொடுக்க முடியும், நான் வெளியில் வேலைக்கு போகும் மனிதன், எல்லாவற்றையும் நான் மட்டும் பார்த்துக் கொள்ளமுடியாது.

மனைவி இறந்த 6 மாசத்துல 2வது கல்யாணம் ஏன்!! மதுரை முத்து ஓபன் டாக்.. | Madurai Muthu Open First Wife S Death 2Nd Marriage

பலர் இதை புரிந்துகொள்ளாமல் கேள்வி கேட்பார்கள். நான் அதை கவனிக்கவே மாட்டேன். அடுத்தவர்கலிடம் நல்லவனென்று சான்று வாங்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கணும். ஆரம்பத்தில் குழந்தைக்கும் அம்மாவுக்கு நல்ல பந்தம் இருந்தது, ஆனால் அவர் வேலைக்கு போவதால் சிறு இடைவெளி வந்தது. நான் இதை எதிர்ப்பார்ததுதான் கல்யாணம் செய்தேன். வாழ்க்கையில் எல்லாரிடமிருந்தும் எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாது என்பது எனக்கு தெரியும், ஆனாலும் குடும்பம் போய்க்கொண்டே இருக்கிறது, அதுதான் முக்கியம் என்று மதுரை முத்து பகிர்ந்துள்ளார்.