நான் சொல்ல விரும்புவது இதுதான்!! மனைவி மகாலட்சுமியை பற்றி ஓப்பன் செய்த ரவீந்தர்..
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் விமர்சித்து பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தநிலையில், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வண்ணம் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இடையில் பண மோசடியில் ஒரு மாதம் சிறையில் இருந்த ரவீந்தருக்கு அவரது மனைவி மகாலட்சுமி தான் உறுதுணையாக இருந்துள்ளார். திருமணமாகி 2 ஆண்டுகளாகவுள்ள நிலையில், ரவீந்தரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.
இதற்கு நன்றி கூறும் வகையில் ரவீந்தர், அன்பு என்பது கவனிப்பை பற்றியது. ஒவ்வொரு விருப்பத்தில் இருந்தும் உண்மையான அன்பையும் அக்கறையும் நான் உன்னிடம் கண்டேன். இப்போது நான் உறுதி அளிக்கிறேன், மீதமுள்ள 364 நாட்களும் உன்னை கவனித்துக் கொள்வேன.
ஏய், நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நான் இன்று சிரிக்கவில்லை, அதைவிட இன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குடும்பத்திற்காக நேசித்து வாழுங்கள்.. ஓய்வு அனைத்தும் இடம்பெறும் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு மகாலட்சுமி, அதை யாரும் சிறப்பாக செய்வதில்லை, நான் உங்களை காதலிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்கள் கூறி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.