சிவகார்த்திகேயன் பட நடிகை அத்மியாவா இது? திருமணமாகி அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே!
சினிமாவில் நடிகைகள் பெரும்பாலும் சில காரணங்களால் விலகி சென்று விடுவார்கள். ஆனால் ஒருசிலருக்கு படவாய்ப்புகள் கிடைக்காமல் குடும்ப வாழ்க்கையை தேர்ந்தெடுத்து சென்று விடுவார்கள். அப்படியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராக அறிமுகமாகி நடித்த இரண்டாம் படம் மனம் கொத்தி பறவை.
இப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆத்மியா ராஜன். மலையாளம் பேசும் நடிகையாக அறிமுகமாகிய ஆத்மியா இப்படத்திற்கு பிறகு பிஸி நடிகையாக இருந்தார். ஆனால் பெரியளவில் பேசம்படியாக வளராமல் இருந்தார். 2021 ஜனவரி மாதம் சனூப் என்பவரை திருமணம் செய்த ஆத்மியா தற்போது நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் வெள்ளை யானை படத்தில் அவருக்கு ஜோடியாக கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார்.
தற்போது அடையாளம் தெரியாமல் மாறிய ஆதிமியா அஜித்தின் உன்னோடு வாழாத பாடலுக்கு பாடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.