ரஜினிகாந்த் சென்ற இரவு பார்ட்டியில் கசமுசா!.. லைக்காவால் மன கஷ்டத்தில் மணிரத்னம்.. இதுதான் நடந்தது..
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன் 1. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி 500 கோடிக்கு வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியை கொண்டாட சில தினங்களுக்கு முன் லைக்கா நிறுவனம் சக்சஸ் பார்ட்டியை பிரபல ஓட்டலில் வைத்துள்ளது.
இரவு பார்ட்டி
விழாவில் படக்குழு உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். மாலை ஆரம்பித்த இரவு பார்ட்டி விடியவிடிய நடைபெற்றுள்ளது. ஆட்டம் போட்டு ஆடிய சில வீடியோக்களும் இணையத்தில் வெளியானது.
இப்படியிருக்கையில் பார்ட்டியில் சில சலசலப்பான விசயம் நடந்துள்ளதாம். அதாவது லைக்கா நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் மணிரத்னத்துடன் உதவி இயக்குனராக பணியாற்றிய பெண் இயக்குனரிடம் தவறான முறையில் நடந்து கொண்டாராம்.

கஷ்டத்தில் மணிரத்னம்
இதனால் அங்கிருந்தவர்கள் அந்த நபரை வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட சம்பந்தப்பட்ட நபரை விலக்கி அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரண் கூட எதுவும் கேட்காமல் சென்றுள்ளார்.
இது தற்போது மணிரத்னத்திற்கு கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாம். தன்னை நம்பி வைத்த பெண் இயக்குனரிடம் இப்படி லைக்கா நிறுவனத்தினர் நடந்து கொண்டவிதம் வருத்தத்தை ஏற்படுத்தி கசப்பான மனப்பான்மைடை மணிரத்னமிற்கு கொடுத்துள்ளதாம்.