சொந்த அண்ணன் தற்கொலைக்கு காரணமே மணிரத்னம் தான்!! அதிர்ச்சி கொடுத்த பிரபல தயாரிப்பாளர்..

Gossip Today Mani Ratnam Tamil Directors
By Edward May 11, 2024 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து இயக்குனர் மணிரத்னம் அவர்களின் குடும்ப ரகசியம் இணையத்தில் கசிந்துள்ளது. மணிரத்னம்-ஐ போல் அவரது அண்ணன் ஜீவி எனும் ஜீ வெங்கடேஷும் புக்ழபெற்ற தயாரிப்பாளராக இருந்தவர் தான். சில ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அவரது தற்கொலைக்கு காரணம் மணிரத்னம் தான் என்று பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஓப்பனாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சொந்த அண்ணன் தற்கொலைக்கு காரணமே மணிரத்னம் தான்!! அதிர்ச்சி கொடுத்த பிரபல தயாரிப்பாளர்.. | Manickam Narayanan Opem Manirathnam Reason Brother

ஜீவி தன்னை பார்க்க அடிக்கடி என் அலுவலகத்திற்கு வருவார் என்றும் தயாரிப்பாளராக இருக்கும் சமயத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளுடன் தான் இருந்தார் என்றும் கூறியிருக்கிறார். ஒரு முறை திடிரென இரு நாட்கள் காணாமல் போய்விட்டார். ஒரு நாள் என்னுடைய வீட்டிற்கு வந்து நான் தற்கொலை செய்ய நினைத்தேன் என்று கூறினார்.

அப்படி அவர் கூறியதும் ’நான் தான் இருக்கிறேன்ல உங்கள் பணப்பிரச்சனையை நான் பார்த்துக்கொள்கிறேன், அதுபற்றி பலரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் அதைப்பற்றி எதுவும் யோசிக்க வேண்டாம்’ என்று சத்தம் போட்டு கூறியதாகவும் மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார்.

சொந்த அண்ணன் தற்கொலைக்கு காரணமே மணிரத்னம் தான்!! அதிர்ச்சி கொடுத்த பிரபல தயாரிப்பாளர்.. | Manickam Narayanan Opem Manirathnam Reason Brother

மேலும், அன்பு செழியன் பண விசயமாக என்னை மிகவும் டார்ச்சர் செய்கிறார். அவரை ஆஃப் செய்ய 60 லட்சம் கொடுக்குமாறு ஜீவி தன்னிடம் கேட்டார். தன்னிடம் அக்கவுண்டில் பணம் இல்லை, என்று கூறியதும் சும்மா 60 லட்சம் எழுதி கொடு, அன்பு செழியனை சில நாட்கள் சமாளிக்கிறேன் என்று தன்னிடம் செக்கை வாங்கி கொண்டு சென்றதாக மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார்.

அதன்பின் சில நாட்கள் கழித்து மாணிக்கம் நாராயணன் வீட்டிற்கு ஜீவி தொடர்பு கொண்ட போது கோலாலம்பூரில் ஒரு விழாவிற்கு சென்றுள்ளதாக அவரது மனைவி கூறியிருக்கிறார். அந்த நாளிலேயே ஜீவி தற்கொலை செய்துள்ளார்.

அம்பானி வீட்டு விஷயத்தை மிஞ்சிடும்.. 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?..

அம்பானி வீட்டு விஷயத்தை மிஞ்சிடும்.. 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?..

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் உங்கள் தம்பி (மணிரத்னம்) தான் இருக்கிறாரே அவரை ஒரு படம் எடுத்து தரச்சொல்லுங்கள், அதன்மூலம் கடன் அடைத்துவிடலாமே என்று கேட்டதற்கு ’அவன் எல்லாம் ஒரு மனுசனா? அவன பத்தி பேசாத’ என்று கடிந்து கொண்டாராம் ஜீவி.

அண்ணனின் பணப்பிரச்சனையில் எந்தவித உதவியும் செய்யாமல் இருந்த மணிரத்னம் அந்த உதவியை செய்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். அவர் குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்திருப்பார் ஜீவி. எல்லோரும் மணிரத்னமை கொண்டாடுகிறார்களே? அவர் அண்ணன் தற்கொலைக்கு அவரே ஒரு காரணமாக இருந்திருக்கிறார்.

அவர் எல்லாம் என்ன மனுஷன்? நான் அவரால் பல கோடி நஷடமடைந்தது தான் மிச்சம் என்றும் 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது உலகத்தில் இனி இருந்து என்ன செய்யப்போகிறார் என்று கண்டபடி மாணிக்கம் நாராயணன் பேசியிருக்கிறார்.