மணிமேகலையின் பஞ்ச் வசனம்!! பிரியங்காவுக்கு பதிலடியா..அதிர்ந்த ரசிகர்கள்..
மணிமேகலை
ஜீ தமிழில் ஒளிப்பரபாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். விஜய் டிவியில் இருந்து வெளியேறி ஜீ தமிழிக்கு சென்ற மணிமேகலைக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய ஆதரவை கொடுத்து வருகிறது.
ஏற்கனவே பிரியங்காவுடனான பிரச்சனையால் மணிமேகலை குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோட்டில் தர லோக்கல் குத்து ரவுண்ட் நடைபெற்றது.
அதில் மணிமேகலை தொகுப்பாள்ராக மட்டும் இல்லாமல் போட்டியாளர்களோடு இணைந்து ஒரு பாட்டுக்கு ஆட்டம் ஆடி இருக்கிறார். அந்த நடனத்தின் போது ஆரம்பத்தில் மணிமேகலை ஒரு டயலாக் பேசுவதுபோல் இருக்கும்.
பஞ்ச் வசனம்
அதில், அங்கிருக்கும் நான் நடன கலைஞர்கள், மணிமேகலையிடம் எப்படிக்கா உங்களை மட்டும் இங்கிருக்கும் எல்லோரும் இப்படி பாசமாகவும் மாஸாகவும் பார்க்கிறாங்க என்று கேட்டனர்.
அதற்கு மணிமேகலை, நம்மளை விரோதியா பாக்குறங்களை கூட நாம நண்பனா தான் பாக்கணும், ஏன்னா நம்முடைய டீமே நட்பே துணை என்று மணிமேகலை பேசி அசத்தி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வர, ரசிகர்கள் மணிமேகலையின் பஞ்ச் வசனம் செம என்று பாராட்டி வருகிறார்கள். சில பிரியங்காவுக்கு மணிமேகலை கொடுக்கும் பதிலடியா என்றும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.