அஜித்தால் மயங்கிப்போனேன்.. திருமணத்திற்கு பின் ஆளே மாறிட்டாரு.. நடிகை மந்த்ரா கூறிய ரகசியம்..

Ajith Kumar Manthra Shalini Gossip Today
By Edward Oct 09, 2024 01:30 PM GMT
Edward

Edward

Report

நடிகை மந்த்ரா

90-ஸ் காலக்கட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் கவர்ச்சிப்புயலாகவும் இருந்து வந்த நடிகை மந்த்ரா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அஜித்தால் மயங்கிப்போனேன்.. திருமணத்திற்கு பின் ஆளே மாறிட்டாரு.. நடிகை மந்த்ரா கூறிய ரகசியம்.. | Manthra Share Ajith Changed After His Marriage

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அஜித்துடன் 'ரெட்டை ஜடை வயசு' படத்தில் நடித்தது குறித்து பேசியிருக்கிறார். தெலுங்கு சினிமாவில் என்னை நடிகையாக பார்த்தார்கள், ஆனால் தமிழில் வெறும் கிளாமர் குயினாக மட்டுமே பார்த்து அந்த கதாபாத்திரங்கள் வழங்கினார்கள்.

முதல் படத்தில் எப்படி ஒரு நடிகையை பார்க்கிறார்களோ அதேபோல் முத்திரை குத்திவிடும் பழக்கம் கோலிவுட்டில் இருக்கிறது. பிரியம் படத்தில் கிளாமர் தூக்கலாக கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டதால் தொடர்ந்து அப்படியே கதாபாத்திரங்கள் குவிந்தன.

அஜித்தால் மயங்கிப்போனேன்.. திருமணத்திற்கு பின் ஆளே மாறிட்டாரு.. நடிகை மந்த்ரா கூறிய ரகசியம்.. | Manthra Share Ajith Changed After His Marriage

1997ல் சிவக்குமார் இயக்கத்தில் அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு படத்தில் நடிக்கும் போது எனக்கு வயசு 16 தான். அஜித்துடன் பெரிதாக டான்ஸ் ஆட எல்லாம் அப்போது எனக்கு வராது.

பீச்சில் இருவரும் நடிக்கும் காட்சியில் திடீரென மணலில் எதையோ எழுதிக் கொண்டிருக்கும் போது, நான் பார்த்த உடனே செமையா சிரித்துவிட்டேன். அந்தளவிற்கு சேட்டை பிடித்தது போல் ஒரு விஷயத்தை அஜித் செய்தார்.

படப்பிடிப்புக்கு அஜித் வந்துவிட்டாலெ அவரது அழகை மயங்கிப்போய் பார்த்துக்கொண்டிருப்பேன். அவரை சைட் அடிப்பதை எங்கம்மா பார்த்து என்னம்மா பண்றன்னு சொன்னதும் தலை குனிந்து ஒன்றுமில்லை என்று சொல்லிவிடுவேன் என மந்த்ரா தெரிவித்துள்ளார்.

அஜித்தால் மயங்கிப்போனேன்.. திருமணத்திற்கு பின் ஆளே மாறிட்டாரு.. நடிகை மந்த்ரா கூறிய ரகசியம்.. | Manthra Share Ajith Changed After His Marriage

திருமணத்திற்கு பின்

மேலும், ராஜா படத்தின் ஷூட்டிங்கின் போது பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கேரவன்கள் எல்லாம் நடிகர்களுக்கு கிடைத்தன. நடிகை ஷாலினி அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்திருந்தார். ரொம்பவே அன்பாக பேசினார்.

ஆனால் அந்த ஷூட்டிங்கின் போது அஜித்திடம் எந்தவொரு குறும்புத்தனத்தையோ சேட்டையையோ பார்க்கவில்லை. ரொம்பவே ப்ரொபஷ்னலாக வந்து நடித்துக்கொடுத்துவிட்டு சென்றார் என மந்த்ரா தெரிவித்துள்ளார்.