படத்துக்கு மட்டுமல்ல ஆட்சி அமைக்கவும் முட்டுக்கொடுக்கும் பெரும் புள்ளி..கண்டுக்கொள்ளாத மாஸ் நடிகர்...
மாஸ் நடிகர்
மாஸ் நடிகருக்கு ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகள் வந்துக்கொண்டு தான் இருக்கிறது. எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் பிரச்சனை தானாகவே வந்து ஒட்டிக்கொள்கிறது.

அவரை சீண்டு சீண்டு தான் அரசியல் தளத்தில் இவ்வளவு பெரிய சக்தியாக மாற வைத்தது என்ற பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும் அவரது படத்தை ரிலீஸ் செய்வதற்கு இடையூறுகள் செய்ததை போல், தற்போது ஆட்சி அமைப்பதிலும் தொடர்ந்து இடையூறு கொடுத்து வருகிறது ஒரு பெரும் புள்ளி.
ஜனவரி மாதம் அவர் படம் வெளியாக வேண்டியது, ஆனால் தேவையில்லாமல் அதில் தலையிட்டு நடிகரை எப்படியாவது தன்னுடைய கைக்குள் போட்டுவிட வேண்டும் என்று நினைத்து வந்தது.
அதுமட்டுமில்லாமல் நடிகர் மீதுள்ள புகார் இன்றின் மீதான விசாரணை ஒன்றுக்காக அடிக்கடி தமிழகத்தில் இருந்து வெளியே செல்லவும் வேண்டியிருந்தது. நடிகர் அதற்கெல்லாம் அடிப்பணியாமல் சைலெண்ட் மூடில் இருந்து வந்தார்.

பெரும் புள்ளி
தற்போது மாஸ் நடிகர் ஆட்சி அமைக்க தயாராகிவிட்டார். அப்படியிருக்கையில் அவருக்கு வேண்டிய பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைக்கவும் அந்த மேலிடத்து பெரும் புள்ளி இடையூறு கொடுத்து வருகிறதாம்.
மாநிலத்திலுள்ள ஆண்ட கட்சிகள் இரண்டும் இணைந்து நடிகரை வீழ்த்தவும் திட்டமிட்டுள்ளார்கள் என்று புரளியையும் அந்த பெரும் புள்ளி பரப்பி வருகிறார்கள். இப்படியிருக்கையில் மாஸ் நடிகர் எதற்கும் அசையாமல் தன்னுடைய அரசியல் வளர்ச்சியிலும் ஆட்சி அமைப்பதிலும் கூடுதல் கவனத்துடன் இருந்து வருகிறாராம்.