மயில்சாமி சாகும் போது கையில் வைத்திருந்த பணம் இவ்வளவு தானா? உண்மையை கூறிய மகன்கள்..

Mayilsamy
By Edward Mar 21, 2023 10:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமானவர் மயில்சாமி. கடந்த மாதம் சிவராத்திரி அன்று கேளம்பாக்கம் மேகாநாதீஸ்வரர் கொயிலுக்கு சென்று சிறப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு போகும் வழியிலேயே மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தமிழ் சினிமாத்துறையினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. மயில்சாமி மரணம் குறித்து பல தவறான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்ததற்கு மயில்சாமி மகன்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தனர்.

மயில்சாமி சாகும் போது கையில் வைத்திருந்த பணம் இவ்வளவு தானா? உண்மையை கூறிய மகன்கள்.. | Mayilsamy Sons And Friend Opens Up Money

இந்நிலையில் மயில்சாமி கடைசியாக நடித்து முடித்த கிளாஸ்மேட் படத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மகன்கள் கலந்து கொண்டு பேசியிருந்தனர். அதில், அப்பாவிட்டுச்சென்ற உதவிகளை நாங்களும் செய்வோம் என்றும் அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகாது என்றும் தெரிவித்தனர்.

மேலும், நிகழ்ச்சியில் மயில்சாமி மகன்கள் சக்தி என்ற நண்பரை அறிமுகப்படுத்தி பேசவைத்திருந்தனர். அதில் நண்பர் சக்தி,அவர் இறக்கும் நடித்த படத்தின் சம்பளமாக 30 ஆயிரம் ரூபாய் தொகை கிடைத்திருக்கிறது.

அதில் 25 ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு உதவியாகவும், 4 ஆயிரம் ரூபாயை அசிஸ்டெண்ட்களுக்கும் கொடுத்துள்ளார். மீதமுள்ள 1000 ரூபாயை மகன்களுக்கு கொடுத்திருப்பதாகவும் சட்டை பாக்கெட்டில் வெறும் 30 ரூபாய் மட்டுமே வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.