இசையமைப்பாளருடன் உறவு, திருமணத்தால் வாழ்க்கையை தொலைத்த மீரா ஜாஸ்மின்.. ரகசியத்தை உடைக்கும் பிரபலம்
மலையாள படங்களில் நடித்து வந்த மீரா ஜாஸ்மின், நடிகர் மாதவன் நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான ரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறிவிட்டார். இப்படி பிஸி நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மின், 2014 -ம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்றனர். தற்போது இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, மீரா ஜாஸ்மின் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு முன்பு இசைக்கலைஞர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது. அவரின் இசையில் மயங்கி தனது மனதை பறிகொடுத்துவிட்டார். அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
அதன் பின் மீரா ஜாஸ்மின் வேறொருவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் தான் இவருக்கு சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
You May Like This Video