படித்த கல்லூரிக்கு குரு தட்சணையாக ரூ. 151 கோடி நன்கொடை!! முகேஷ் அம்பானி நெகிழ்ச்சி..

Reliance Mukesh Dhirubhai Ambani Businessman Mumbai Education
By Edward Jun 08, 2025 07:30 AM GMT
Report

முகேஷ் அம்பானி

இந்தியாவின் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, மும்பையின் மையத்தில், நகரின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றில், அவரது குடும்பத்தினருடன் 27 மாடி கொண்ட ஆண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார். ஆண்டிலியா வீட்டை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

படித்த கல்லூரிக்கு குரு தட்சணையாக ரூ. 151 கோடி நன்கொடை!! முகேஷ் அம்பானி நெகிழ்ச்சி.. | Mukesh Ambani Donates Rs 151 Crore To His Ict

15 ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த வீட்டில் பல ஆடம்பர வசதிகள் இருக்கிறது. அந்த வீட்டில் சுமார் 600 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்காக நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் ரொட்டிகள் தயாரிக்கப்படுவதாக புது தகவல் வெளியானது.

சமீபத்தில் 2024ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட 100 நன்கொடையாளர்கள் பட்டியலில் 404 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்திருந்தார்.

151 கோடி நன்கொடை

கல்வி உதவி, பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை வழங்குதல், கிராமப்புற மேம்பாடு, வேளாண்மை உதவி, நீர்நிலைகளை பாதுகாத்தல், மருத்துவமனை கட்டுவதற்கான உதவிகளை செய்திருக்கிறார்.

இந்நிலையில், முகேஷ் அம்பானி 1970ல் மும்பை ஐசிடி பல்கலைக்கழகத்தில் படித்திருந்தார். சமீபத்தில் ஐசிடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள பேராசிரியர் எம் எம் ஷர்மா, அம்பானிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

படித்த கல்லூரிக்கு குரு தட்சணையாக ரூ. 151 கோடி நன்கொடை!! முகேஷ் அம்பானி நெகிழ்ச்சி.. | Mukesh Ambani Donates Rs 151 Crore To His Ict

பேராசிரியர் ஷர்மாவின் சுயசரிதையான தெய்வீக விஞ்ஞானி என்ற புத்தகத்தை வெளியிடும் விழாவிற்கு முகேஷ் அம்பானி கலந்து கொண்டி பேசியுள்ளார். அதில், தன் தந்தை திருபாய் அம்பானியை போல் இந்திய தொழில்துறையை உலகளாவிய தலைமைக்கு கொண்டு செல்ல ஷர்மாவும் விரும்பினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தனியார் தொழில்முனைவோருடன் இணைந்து செழிப்பின் வெள்ளக்கதவுளை திறக்கும் என்று என் தந்தையும் ஷர்மாவும் நம்பினர். இந்திய ரசாயனத் தொழில்துறையின் எழுச்சிக்கு ஷர்மாவின் முயற்சிகள்தான் காரணம். அவர் ஒரு ராஷ்டிர குரு என்று கூறியதோடு, ஐசிடி பல்கலைக்கழகத்துக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக ரூ. 151 கோடி அளிப்பதாகவும் அறிவித்திருக்கிறே முகேஷ் அம்பானி.