மேடையிலேயே முருகதாஸை அசிங்கப்படுத்திய பாக்யராஜ்? காப்பி இயக்குனருக்கு வந்த சோதனை..
தமிழ் சினிமாவில் கதை திருட்டு என்ற விசயம் பல நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்திலும் இயக்குனர் சங்கத்திலும் பிரச்சனை ஆண்டுக்கு ஒரு முறை நடந்து கொண்டுதான் வருகிறது. அப்படி கதை திருட்டு இயக்குனர் என்றே பேர் எடுத்தவர்கள் வரிசையில் இருப்பவர் இயக்குனர் முருகதாஸ்.
விஜய்யின் மூன்று படங்களை இயக்கிய முருகதாஸ் சர்கார் படத்தை வேறொரு இயக்குனர் கதையாக இருப்பதாக கூறி இயக்குனர் பாக்யராஜ் புகாரளித்து வழக்கும் தொடுத்தார். இதற்காக இறங்கி வந்து பாக்யராஜிடம் சமாதானப்பேச்சிலும் முருகதாஸ் ஈடுபட்டிருந்தார்.
நீதி தான் முக்கியம் என்று கூறியதோடு ஒரு மேடையில் முருகதாஸை கிழிகிழி என்று கடுமையாக பேசி அசிங்கப்படுத்தியிருக்கிறார்.
இதையடுத்து விஜய் இதனால் வாய்ப்பே கொடுக்காமல் எஸ்கேப்பாகி வருகிறார். மற்ற நடிகர்களும் அவரின் கதையை கேட்கவே தயங்கி ஓடி விடுகிறார்கள் என்பதற்காக தற்போது தயாரிப்பில் இறங்கியிருக்கிறார் முருகதாஸ்.