சமந்தாவை பார்த்தால் இப்போதே கட்டிப்பிடிப்பேன்!! நாக சைதன்யா என்ன இப்படி சொல்லியிருக்காரு..
நாக சைதன்யா - சமந்தா
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தா கடந்த 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதன்பின் இருவரும் கேரியரில் கவனம் செலுத்தி வந்த நிலையில் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரகசிய காதலில் இருந்து வந்தார்.
இருவரும் சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து தங்கள் காதலை உறுதிப்படுத்தினர். விரைவில் இருக்கும் திருமணமாகவுள்ள நிலையில் அதன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
சமந்தாவை பார்த்தால்
இந்நிலையில் நாக சைதன்யா கொடுத்திருக்கும் ஒரு பேட்டி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. சில காலத்துக்கு முன் தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டியில், இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நாக் சைதன்யா, இப்போது அவரை பார்த்தால் ஒரு ஹாய் சொல்லிவிட்டு கட்டிப்பிடிப்பேன் என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் நடிகை சமந்தாவின் கடைசி இன்ஸ்டாகிராம் புகைப்படத்தையும் டெலீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.