இரண்டாம் கல்யாணமா! விவாகரத்துக்கு பின் பெற்றோர்களுக்கு கண்டீசன் போடும் நாக சைதன்யா..
தெலுங்கு சினிமாவில் நாகர்ஜுனாவின் வாரிசாக ஜோஸ் என்ற படத்தின் மூலம் நடிகராக களமிரங்கியவர் நடிகர் நாக சைதன்யா. இப்படத்தின் மூலம் நடிகை சமந்தாவுடன் நெருக்கமாக நட்பாக பழகின் வந்தார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்ட 2017 ஆம் ஆண்டு இரு குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் நடிப்பில் ஆர்வம் கொண்டு நடித்து வந்த சமந்தா சர்ச்சையான படங்களில் நடித்து நாக சைதன்யா குடும்பத்தினரை முகம் சுளிக்க வைத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்தனர். விவாகரத்துக்கு பின் நாக சைதன்யா தன் படங்களிலும் சமந்தா ஒரு பக்கம் வேலையை பார்த்துக்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நாக சைதன்யா இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது நாக சைதன்யா தன் குடும்பத்தினருக்கு ஒரு கண்டீசன் போட்டு இருக்கிறாராம்.
சினிமா தொடர்பு இல்லாத பெண்ணை பார்க்க திட்டவட்டமாக கூறியிருக்கிறாராம். இதற்கு காரணம் சினிமாவில் இருந்த ஒரு பெண் தான் குடும்பத்தினை இப்படியாக்கி விட்டு சென்றுவிட்டார்.
அடுத்து வருபவரும் அப்படி நடந்து கொள்ளக்கூடாது என்ற குறிக்கோளில் தான் இப்படியான கண்டீசன் போட்டுள்ளாராம் நாக சைதன்யா.