அமெரிக்காவில் மீண்டும் தனுஷிற்கு திருமணம் செய்ய வேண்டும்.. நெப்போலியன் ஓபன் டாக்
நெப்போலியன்
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே ஒரு பிரபலத்தின் மகன் திருமணம் தான் அதிகம் பேசப்பட்டது. 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷின் திருமணம் தான் அது.
கடந்த நவம்பர் 7- ம் தேதி மிகவும் கோலாகலமாக தனுஷ்-அக்ஷ்யா திருமணம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்துள்ளது.
நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆனவர் இருப்பினும் அவரின் மூத்த மகன் தனுஷிற்கு ஜப்பான் செல்ல ஆசை என்பதால் அவரது திருமணத்தை அங்கேயே நடத்தி முடித்துள்ளார்.
ஜப்பானில் இந்த திருமணம் நடைபெற்றிருந்தாலும் தமிழகத்தை சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டனர்.
அதுமட்டுமின்றி நெப்போலியன் கடந்த 4 மாதங்களாக திட்டமிட்டு தனது மகன் கல்யாணத்தில் 70 வகையான இந்திய உணவுகளை விருந்தாக கொடுத்து அசர வைத்துள்ளார்.
மீண்டும் திருமணம்
இந்நிலையில், நெப்போலியன் அவர் மகன் திருமணம் குறித்து பல விஷயங்களை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், "இந்த திருமணத்திற்காக நான்கு மடங்கு அதிகமாக செலவு செய்துள்ளேன்.
இந்தியாவை விட ஜப்பானில் திருமண செலவு நான்கு மடங்கு அதிகம் இருப்பினும் என் மகனுக்காக இவை அனைத்தையும் நான் செய்து வருகின்றேன்.
இதையடுத்து அமெரிக்கா சென்று அங்குள்ள சட்ட திட்டத்திற்கு ஏற்றபடி மீண்டும் தனுஷிற்கு திருமணம் நடத்த வேண்டி உள்ளது" என்று கூறியுள்ளார்.