4 லட்சம் கொடுத்த நயன் தாரா!! லட்சம் பணம் கொடுக்க காரணத்தை கூறிய மாமியார்..

Nayanthara Vignesh Shivan Gossip Today
By Edward Nov 24, 2022 01:07 PM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதுவே காதலாக மாறியதால் சுமார் 7 ஆண்டுகள் இருவரும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வந்து வந்தனர்.

சமீபத்தில் 7 வருட காதலை தொடரும் வண்ணம் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்கள். ஜூன் 9 ஆம் தேதி திருமணமான பின் படங்களில் நடித்து வந்த நயன் தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்று வளர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் நயன் தாராவின் மாமியாரும் விக்னேஷ் சிவனின் அம்மாவுமான மீனா குமாரி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன் மகன் மற்றும் மருமகள் நயன் தாராவை பற்றியும் பேசியிருக்கிறார்.

பலவிதமாக நயன் தாராவை பெருமையாக பேசிய மீனா குமாரி, நயன் தாரா தன் வீட்டில் 8 பேர் வேலைக்காரர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

அவர்களின் ஒரு பெண் 4 லட்சம் கடனில் தவித்து வந்துள்ளார். அவரின் கடனை அடைக்க நயன் தாரா உடனே 4 லட்சத்தை கொடுத்து உதவியதாக விக்னேஷ் சிவனின் அம்மா கூறியுள்ளார்.