சிம்புவுடனான காதல்!! மிகவும் மோசமான அனுபவம்.. மனம் திறந்த நயன்தாரா

Silambarasan Nayanthara Tamil Cinema
By Bhavya Nov 18, 2024 07:30 AM GMT
Report

நயன்தாரா 

மலையாள சினிமா மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கடின உழைப்பாலும் நம்பிக்கையாலும் இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.

இவருடைய காதல் கதை குறித்து ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் Nayanthara Beyond The Fairy Tale என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளார்.

சிம்புவுடனான காதல்!! மிகவும் மோசமான அனுபவம்.. மனம் திறந்த நயன்தாரா | Nayanthara Talk About Her First Love

இன்று நயன்தாராவின் பிறந்தநாளை கருத்தில் கொண்டு அந்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. இதனை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருக்கிறார்.

பல சர்ச்சைகளுக்கு பின் வெளியான இந்த படத்தில் நயன்தாரா அவருடைய முதல் காதலான சிம்பு குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

மனம் திறந்த நயன்தாரா 

அதில், "என்னுடைய முதல் காதல் முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் தான் இருந்தது. ஒரு ரிலேஷன்ஷிப்பில் காதலை தாண்டியும் நம்பிக்கை வேண்டும்.

அப்போது தான் அந்த காதல் நிலைத்து இருக்கும். என்னுடைய முந்தைய காதல்கள் பற்றி இதுவரை நான் பேசியதில்லை. ஆனால் மற்றவர்கள் அதை பற்றி பல விஷயங்களை அவர்களே நினைத்துக்கொள்வார்கள்.

சிம்புவுடனான காதல்!! மிகவும் மோசமான அனுபவம்.. மனம் திறந்த நயன்தாரா | Nayanthara Talk About Her First Love

ஒரு காதல் உடைந்து போனால் அதில் குற்றம் சாற்றப்படுவது பெண்களை தான் ஆனால் அந்த காதலில் சம்மந்தப்பட்ட ஆண்களிடம் சென்று நீங்கள் ஏன் இதை செய்தீர்கள் என்று யாரும் கேட்பதில்லை. இது உண்மையில் நியாயமே இல்லை" என்று கூறியுள்ளார்.