நிரூப்புடன் தொடர்பில் இருந்த பிக்பாஸ் அபிராமி! பிளேபாயா இருப்பாரோ..
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களில் பரிசித்தமானவர் நடிகை அபிராமி. நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாடலாக உள்ளே சென்றார். மக்கள் மனதை ஈர்த்து பின் சில படங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சென்றுள்ளார்.
யாஷிகாவிற்கு முன்பே நிரூப்பை அபிராமி காதலித்த செய்தி அனைவருக்கும் தெரியும். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் இணையத்தில் கசிந்தது. இந்நிலையில் நிரூப் அபிராமியை நாமினேட் செய்துள்ளது அதிர்ச்சியாக்கியுள்ளது.
முன்பு பார்த்த அபிராமி தற்போது இல்லை என்றும் நான் பழகிய அபிராமி இப்போது இல்லை, வேறு யாரையோ பார்ப்பது போல் இருக்கிறது. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து உங்களுடைய முன்னாள் காதலியை சந்தித்தபோது உங்களுடைய அந்த நிமிஷம் எப்படி இருக்கும்? என்று அபிராமி நிரூப்பிடம் கேட்டுள்ளார். அதற்கு நிரூப், அந்த முன்னாள் காதலியே நீங்கள்தான்’என்று கூறியதும் சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், அபிராமி பிக்பாஸ் 3 சீசனில் அமைதி பெண்ணாக இருந்தார். ஆனால் தற்போது கத்துவதில் பிரியங்காவையே மிஞ்சும் அளவிற்கு நடந்து கொள்கிறார்.
