கரண்ட் இல்லன்னா கம்முன்னு இருங்க..எதுக்கு கேள்வி!! பகீர் கிளப்பிய மாஸ்டர் மகேந்திரன்..
மாஸ்டர் மகேந்திரன்
தமிழகத்தில் தவெக தலைவர் ஜோசப் விஜய் முதல்வரானதில் இருந்து சென்னை உள்பட பல மாவட்டங்களில் மின்வெட்டி பிரச்சனை அதிகரித்து வருகிறது.
இதனால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில் பொதுமக்கள் சாலையில் இறங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் மின்வெட்டை எதிர்த்து பலரும் கண்டனங்களும் விமர்சனங்களையும் முன்வைத்து வரும் நிலையில், நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஒரு கருத்தினை கூறி பகீர் கிளப்பி இருக்கிறார்.
கரண்ட் இல்லன்னா
அதில், தமிழ்நாட்டுல மின்வெட்டு இருக்கு, என் வீட்டுலயும் தான் மின்வெட்டு இருக்கு. அதுக்காக நம்ம முதலமைச்சர் விஜய்யிடம் கேள்வி எழுப்புனா உங்க வீட்டுக்கு கரண்ட் வந்துருமா?

இப்போ முதலமைச்சரை நோக்கி மைக்க நீட்டி என்னங்க தமிழ்நாட்டுல ஒரே மின்வெட்டா இருக்கு? அப்படின்னு கேள்வி கேட்டா? உடனே கரண்ட் வந்துருமா? என்று பேட்டியில் பேசியிருக்கிறார்.
இதற்கு பலரும் கேள்வி கேட்டா கரண்ட் வந்துருமா? என்று பேசுவது பொறுப்பற்ற மற்றும் மேட்டுக்குடித்தனமான அணுகுமுறை என்று பலரும் மாஸ்டர் மகேந்திரனை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.