சத்தியமா சொல்றேன், நான் சினிமாவை விட்டு போறேன்!! பார்த்திபன் எடுத்த முடிவு..
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல பன்முகத் தன்மை கொண்டவர் தான் நடிகர் பார்த்திபன். இவர் தொடர்ந்து வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து வருகிறார்.
கடைசியாக அவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் TEENZ படம் தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், சத்தியமா சொல்றேன் TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன்.
இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே. இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க.
அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு science fiction & fantasy thought ல் எடுக்கப் பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும். நன்றி :பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு வரம் : வரவிருக்கும் தூய்மையான வெற்றி. நனைந்த இமைகளோடு இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று பதிவிட்டு இருக்கிறார்.
Friends
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 14, 2024
சத்தியமா சொல்றேன்
TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா
நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான்… pic.twitter.com/XFUmjISkSF