பத்மஸ்ரீ வாலியை வைத்து இப்படிதான் இந்த பாடல் உருவானதாம்! நடந்ததை கூறிய இசைஞானி..

kamalhaasan yuvanshankarraja ilaiyaraja PerVachaalum Dikkilona
By Edward Sep 21, 2021 07:40 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இசைஞானி என்ற பெயரோடு 1000த்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு 7000 பாடல்களை உருவாக்கி கொடிக்கட்டி பறந்து வருபவர் இளையராஜா. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைவ் நிகழ்ச்சியை நடத்தி நீங்கா இடத்தினை ரசிகர்கள் மத்தியில் பெற்றவர் இளையராஜா.

இவர் இசையமைத்து வெளியாகி நல்ல பேர் பெற்ற பாடல்தான் பேரு வெச்சாலும் பாடல். தற்போது நடிகர் சந்தானம் படமான டிக்கிலோனா படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இப்பாடலை ரீமேக் செய்து இசையமைத்துள்ளார். அந்த பாடல் தற்போது பெரியளவில் ரசிகர்களால் கவரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்பாடல் உருவான விதத்தை கூறியுள்ளார் இளையராஜா. பாடலுக்கு இசையமைத்து பாடலாசிரியர் வாளியிடன் பாட்டு எழுத கூறினேன். டட்டாட என ஆரம்பித்து கூறிய இளையராஜா, இப்படியெல்லாம் கேட்டு எப்படி எழுதுவது என்று கேட்டுள்ளார்.

துப்பார்ற்கு துப்பாய குரலை கூறியதும் அதுதுதான் பேரு வெச்சாலும் என எழுதினார் வாளி என்று சிரிப்போடு கூறிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.