தனுஷை அப்படி சொன்னவங்கள செருப்பால அடிக்கனும்.. சுசித்ராவால் கோபத்தில் பொங்கிய தொகுப்பாளர்..
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக திகழ்ந்து தற்போது மிகப்பெரிய சர்ச்சை செய்திகளை பரப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பாடகி சுசித்ரா.
சுச்சி லீக்ஸ்
சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் மூலம் நட்சத்திரங்கள் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகி சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது மீண்டும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் நெறியாளர் முக்தர் எடுத்த பேட்டியில் கலந்து கொண்டு பேசிய பாடகி சுசித்ரா, தனுஷ் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில், காதல் கொண்டேன் படம் ரிலீஸ் ஆன காலகட்டம். அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மாவிற்கு திரைத்துறை சார்பில் விழா நடத்தப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாட மற்ற பின்னணி பாடகர்களை போல் நானும் சென்றேன்.
செருப்பால அடிக்கனும்
அப்போது என்னுடன் வந்த பின்னணி பாடகர்கள் சற்று தொலைவில் அமர்ந்திருந்த தனுஷைப் பார்த்து காதல் கொண்டேன் என்ற பார்ன்(ஆபாச படம்) படத்தில் நடித்த பையன் அங்கு உட்கார்ந்திருக்கிறார்ன் என்று கூறினார்கள்.
உடனே தொகுப்பாளர் முக்தர், அனைவரையும் செருப்பால் அடிக்க வேண்டும், அதவாது யாரெல்லாம் தனுஷை ஆபாச பட ஹீரோ என்று கூறினார்களோ அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்படி பின்னணி பாடகிகள் அவ்வாறு கூறியதும் இது நல்ல செயல் அல்ல, தனுஷுடன் சுமார் 30 நிமிடங்கள் அமர்ந்து பேசிவிட்டு வந்தேன் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.