பாஜக தான் வேணும்னு காலில் விழுந்து அழுதார்கள்!! தீவிரமாகும் அப்பா - மகன் சண்டை..
பாட்டாளி மக்கள் கட்சி
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது தந்தை ராமதாஸ், மகன் அம்புமணி இடையே மோதல் தீவிரமடைந்ததை அடுத்து இவர்களின் செயல்கள் தற்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கிறது.
வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றிய ராமதாஸ், இதுவரை அவர் தேர்தலில் போட்டியிட்டதும் கிடையாது எந்த பதவியை அனுபவித்ததும் கிடையாது. அதே நேரத்தில் ஏகே மூர்த்தி, ஏழுமலை உள்ளிட்ட பலரை மத்திய அமைச்சர்களாக மாற்றியிருக்கிறார் ராமதாஸ்.
அப்பா - மகன் சண்டை
இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே தந்தை மகன் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், அன்புமணி பற்றி ராமதாஸ் விமர்சித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, பொய்யை மூச்சு விடாமல் பேசுபவர் அன்புமணி, அவர் கூறிய பொய்யை நம்பி நிர்வாகிகள் யாரும் வரவில்லை, கட்டுக்கோப்பாக நடத்தி வந்த கட்சியை, அன்புமணி அவமானப்படுத்தி விட்டார், தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லை.
தன் தாய்மீது தாக்குதல் நடத்த முயன்றார் அன்புமணி என்று கூறியிருக்கிறார் ராமதாஸ். பாஜக கூட்டணி காரணமாகவே இருவர் இடையே மோதல் வெடித்திருக்கிறதாம். மேலும் பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்கணும் என அன்புமணி என்னை மிரட்டினார்.
அவரும் செளமியாவும் என் காலைப்பிடித்து அழுதனர். என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. கூட்டணிக்கான எல்லா ஏற்பட்டையும் செளமியாவே செய்துவிட்டார். மறுநாள் காலை வாசலில் பாரத் மாதா கி ஜே என கோஷம் கேட்டது, இது அனைத்தும் எனக்கு தெரியாமலேயே நடந்ததாக” ராமதாஸ் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதைவைத்து நெட்டிசன்கள் கலாய்த்தபடி மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள்..

