நயன்தாரா அவ்வளவு வெறியாக இருந்தார்.. பிரபல இயக்குனர் கூறிய தகவல்
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக ராக்காயி எனும் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தனுஷுடனான பிரச்சனை பூகம்பமாக வெடி சிதறியது. இந்த பிரச்சனை தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
நடிகை நயன்தாராவிற்கு பேர் தேடி தந்த படங்களில் ஒன்று பில்லா. இப்படத்தின் இயக்குனர் விஷ்ணு வர்தன், நடிகை நயன்தாரா குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இதில் "நாங்கள் பில்லா எடுக்கும் போது நயன்தாரா அவ்வளவு வெறியாக இருந்தார், அவர் சில பிரச்சனைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். அதனால் கண்டிப்பாக கம்பேக் கொடுத்தே ஆகவேண்டும் என வெறியாக இறங்கி அடித்தார். அதனால் தான் இன்றும் கூட அவர் உச்சத்தில் இருக்கிறார். அவரின் பின் வாங்காத இந்த குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்" என இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.