அவதிப்பட்ட பெண்கள்! மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்ட அமலா பால்! பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்
தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை அமலா பால். இவர் நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் திரைப்படம் வெளிவந்தது. கடந்த ஆண்டு அமலா பாலுக்கு இரண்டாம் திருமணம் நடந்தது.
ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும் கடந்த ஜூன் மாதம் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், நடிகை அமலா பால் குறித்து மேக்கப் கலைஞர் ஹேமா என்பவர் கூறியுள்ள தகவல் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேக்கப் கலைஞர்களில் பிரபலமான ஒருவர் ஹேமா. இவர் பல முன்னணி நடிகைகளுக்கு மேக்கப் போட்டுள்ளார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை அமலா பால் படப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
நான் ஒருமுறை நடிகை அமலா பாலின் படப்பிடிப்புக்கு சென்றேன். அப்போது ஏப்ரல் மற்றும் மே மாதம் என்பதால் கடுமையான வெயில் இருந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் நிழலோ, மரமோ இல்லாததால் கொஞ்ச நேரம் கூட எங்கேயும் அமர முடியவில்லை. இதனால் அங்கிருந்த சில பெண்களும் தவித்தனர். இதனால் அங்கே இருந்த கேரவனுக்குள் சென்று அமர்ந்து கொண்டோம்.
ஆனால், நாங்கள் அமர்ந்து இருந்த கொஞ்ச நேரத்திலேயே நடிகை அமலா பால் தனது மானேஜரை அழைத்து எங்களை வெளியேறும்படி சொல்லினர்.
இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம். ஆனால், நாங்கள் இறங்கும் வரை அவர் எங்களை விடவில்லை. அதனால் கேரவனை விட்டு இறங்கிவிட்டோம். அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை இதுபோல் பல சம்பவங்கள் எனக்கு நடந்தது.