பிள்ளைகள் மேல் அதிக பாசம் வேண்டாம்.. பிரபு தேவா எமோஷனல் பேச்சு
பிரபு தேவா
திரையுலகில் நடன கலைஞர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா. இவர் முதலில் ரம்லத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள், அதில் ஒருவர் தனது சிறு வயதிலேயே இறந்துவிட்டார்.
பிரபல நடிகை நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக பிரபு தேவாவிற்கும், அவருடைய முதல் மனைவி ரம்லத் என்பவருக்கும் இடையே பல பிரச்சனைகள் வந்தது. இதன்பின் நயன்தாரா - பிரபு தேவா பிரிந்துவிட்டனர். இதை தொடர்ந்து ரம்லத்தை விவாகரத்து செய்தார்.
அதிக பாசம் வேண்டாம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹிமானி சிங் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கும் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், பிரபுதேவா அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர், நான் என் பிள்ளைகள் மீது அதிகமாக பாசம் வைத்துள்ளேன். ஆனால் அந்த தவறை மட்டும் வாழ்க்கையில் யாரும் செய்து விடாதீர்கள். பிள்ளைகள் மீது அதிகமாக பாசம் வைத்தால் பிறகு அவர்களுக்கு சின்ன விஷயம் என்றால்கூட அதை தாங்க நம்மால் முடியாது. மேலும், அவர்களை நன்றாக வளர்க்க வேண்டும் என்று யோசித்து நம்மால் ஃப்ரீயாக வாழ முடியாது. அதனால் பிள்ளைகள் மீது அதிகமான பாசம் வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.