அந்த விஷயத்தை வெளியே சொன்ன அவ்வளவுதான்!! நடிகை மீனாவை மிரட்டிய பிரபு..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. முன்னணி நடிகர்களுடன் ஜோட்டியாக நடித்த மீனா 2009 வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து நைனிகா என்ற மகளை பெற்றார். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகி சில ஆண்டுகளுக்கு முன் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு அவரது கணவர் வித்யாசாகர் நுரையீரல் பிரச்சனையால் மரணமடைந்தது அனைவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதில் இருந்து மீண்டு வர சில மாதங்கள் எடுத்துக்கொண்ட மீனா 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடினார்.
சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் கலா எடுத்த பேட்டியொன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். மகள் நைனிகா நடிகையாவாரா என்ற கேள்விக்கு இப்போது தான் கீபோர்ட் வாசிப்பதில் ஆர்வம் வைத்திருக்கிறார். வளர்ந்ததும் எந்த துறையை விரும்புகிறாரோ அந்த துரையில் முன்னேற நைனிகாவும் நான் உதவியாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும், ஒருமுறை நடிகர் பிரபுவிடம், நான் ஹீரோயினாக நடித்த போது குழந்தை நட்சத்திரமாக அவருடன் நடித்தை பற்றி கூறினேன். அவர் ஆச்சரியப்பட்டு இந்த விஷயத்தை வெளியே சொன்னால் அவ்வளவு தான் என்று மிரட்டியதாகவும் மீனா கலகலப்புடன் கூறியிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக தன்னுடன் ஹீரோயினாக மீனா நடித்ததால் பிரபுவின் வயது என்ன என்று தெரிந்துவிடும் என்பதால் அவர் விளையாட்டாக மிரட்டியதாக மீனா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.