பிரகாஷ் ராஜுடன் விவாகரத்துக்கு பின் திருமணம் செய்யாமல் இருக்க இதான் காரணம்!! முதல் மனைவி லலிதா..
இந்திய சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரகாஷ் ராஜ். நடிப்பில் பலவிதமான வேரியேஷன்களை காமித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்த பிரகாஷ் ராஜ், தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
பிரகாஷ் ராஜ் கடந்த 1994ல் லலிதா குமாரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு மகன்கள், ஒரு மகனை பெற்றெடுத்தார். மகன் சித்து உயிரிழந்தது இருவருக்கும் பெரிய பாதிப்பாக அமைஅந்தது. அதிலிருந்து மீண்டு இரு மகள்களையும் வளர்த்து வந்தனர். அந்த சூழலில் பிரகாஷ் ராஜுக்கும் லலிதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட 2009ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
மனைவியை விவாகரத்து செய்த அடுத்த ஆண்டில் கோரியோகுராஃபர் போனி வர்மாவை 2010ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். முன்னள் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டாலும் லலிதா குமாரி இன்னும் 2ஆம் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.
இதற்கான காரணம் என்ன என்று லலிதா குமாரி அளித்த பேட்டியின் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. அந்த பேட்டியில், நான் என் முதல் திருமண வாழ்க்கையில் உண்மையாகத்தான் இருந்தேன்.
விவாகரத்து நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை சிறப்பாக எனக்கு அமைந்தது. அதை தவிர்த்து வேறு ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார் லலிதா குமாரி.