34 வயதில் 34 குழந்தைகளுக்கு தாய்!! பிரபல நடிகையின் பின்னணி..
ப்ரீத்தி ஜிந்தா
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா உள்ளிட்டவர் நடித்து மிகப்பெரிய ஹிட் படமாக மாறியது தில் சே. இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இப்படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகையாக பாலிவுட்டில் கலக்கி வந்தார்.
32 வயதில் சினிமாவில் இருந்து விலகிய ப்ரீத்தி ஜிந்தா, 2016ல் அமெரிக்காவை சேர்ந்த நீண்டநாள் நண்பர் ஜீன் குட் இனாஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராக திகழ்ந்து இப்போது வரை சிறப்பான அணியாக வழி நடத்தி வருகிறார். 5 வருட திருமண வாழ்க்கைக்கு பின் ப்ரீத்தி ஜிந்தா வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக்கொண்டார்.
34 குழந்தைகளுக்கு தாய்
ஆனால் ப்ரீத்தி ஜிந்தா திருமணம் செய்வதற்கு முன்பே 34 குழந்தைகளுக்கு தாயாக மாறிவிட்டார். 2009ல் தனது 43வது பிறந்தநாளில் 34 குழந்தைகளை தத்தெடுத்தார் ப்ரீத்தி.
குழந்தைகளின் கல்வி செலவு, உணவு, உடை என அனைத்தையும் அவரே கவனித்துக் கொண்டு வருகிறாராம். தனது 46வது வயதில் தான் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.