ECR- பங்களா வாங்கியதும் இப்படியா!! வாய்ப்பில்லாமல் இந்த வேலையை பார்க்கும் நடிகை பிரியா பவானி!!
சின்னத்திரையில் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் சீரியலில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று குடும்பபாங்கான நடிகை என்ற பெயரை எடுத்தார்.
அதன்மூலம் வெள்ளித்திரையில் மேயாதமான் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.அதன்பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், பொம்மை, ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
தற்போது இந்தியன் 2, டிமாண்டி காலணி 2 உள்ளிட்ட பல படங்களை கையிருப்பில் வைத்துள்ளார். சமீபத்தில் தான் காதலித்த காதலருடன் புது ஈசிஆர் பங்களாவில் குடியேறியிருந்தார்.
இந்நிலையில் எங்களுடைய தனி ரெஸ்ட்டாரண்ட் என்று பதிவிட்டு தனியாக ஓட்டல் வேலையை ஆரம்பித்திருக்கிறேன் என்று பிரியா பவானி சங்கர் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் தான், தன் ஈசிஆரில் பங்களா வாங்கும் கனவு நிறைவேறியது என்று கூறி காதலருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிந்தார். மேலும் தான் காசுக்காத்தான் நடிக்கிறேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.
இந்நிலையில் தனியாக ஓட்டல் ரெஸ்ட்டாரண்ட் திறக்கவுள்ளது ரசிகர்களை வாய்ப்பிளக்க செய்துள்ளது.