தலைவா படத்தில் விஜய்க்கு பிளாக்கில்தான் பணம் கொடுத்தோம்..ஊழல் பற்றி பேசலாமா!! பிரபல தயாரிப்பாளர் பகீர்..
விஜய் - தமிழக வெற்றிக் கழகம்
தவெக தலைவர் தளபதி விஜய் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டினை விக்கிரவாண்டி வி சாலையில் பிரம்மாண்ட முறையில் நடத்திமுடித்தார்.
பல கோடி செலவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டு தளபதி பேசியதை கொண்டாடினார்கள் என்று கூறப்பட்டது.
மாநாட்டில் முதன்முதலாக பேசிய விஜய், கொள்கைகள் முதல் 2026 தேர்தல் வரையிலான நடவடிக்கைகள் குறித்து விஜய் காரசாரமாக பேசியிருந்தார்.
அதிலும், விஜய் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமரும் காலத்தில் தமிழ்நாட்டில் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க முழு மூச்சாக செயல்படுவோம் என்று பேசியிருந்தார்.
ஏ எல் அழகப்பன்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலைவா என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இயக்குநர் ஏல் எல் விஜய் இயக்கத்தில் அவரது தந்தை பிரபல தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் தயாரிப்பில் விஜய், அமலா பால் நடிப்பில் உருவாகி வெளியான படம் தான் தலைவா.
இப்படம் வெளியாக அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக கட்சியால் நெருக்கடி கொடுக்கப்பட்டு படம் ரிலீஸில் பிரச்சனை ஏற்பட்டது. மற்ற மாநிலத்தில் ரிலீஸான பின் தான் தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆனது. படம் இங்கு வெளியாகி படுமோசமான விமர்சனத்தையும் வசூலையும் பெற்றது.
இந்நிலையில், தலைவா படத்தின் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் அளித்த பேட்டியில், தலைவா படத்திற்கு நான் விஜய்க்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தேன் என உங்களுக்குத் தெரியுமா? சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு அவர்களின் சம்பளத்தை பாதியை செக்-ஆக கொடுப்போம்.
பாதி சம்பளத்தை பணமாக கொடுத்துவிடுவோம். இல்லையென்றால் 30 சதவீதம் வருமானவரி கட்டவேண்டும். இது வருமானவரி அதிகாரிகளுக்கே தெரியும். நாங்களும் அப்படித்தான் வாங்குவோம், அப்படித்தான் கொடுப்போம் என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோவை இணையத்தில் நெட்டிசன்கள் பரப்பி,
தற்போது விஜய் அப்படி பேசுவது சரியா என்றும் கலாய்த்து வருகிறார்கள்.