தினேஷை ரச்சிதா பிரிய காரணமே அவர்கள் தான், நடந்ததே இதுதான்!! உண்மையை கூறிய தினேஷ் பெற்றோர்கள்..
சீரியல் நடிகர் நடிகைகளாக இருந்து ரியல் தம்பதிகளாக மாறி திருமணம் செய்து கொண்டனர் தினேஷ் - ரச்சிதா. திருமணமாகி சிறப்பாக சென்று வந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். அதனை தொடர்ந்து பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின்பும் கணவருடன் சேராமல் அவர் மீது போலிசில் புகாரும் அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தினேஷ் விவாகரத்து கொடுப்பதாகவும் பேட்டியளித்திருந்தார். பின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தினேஷ், இருவருக்கும் இடையில் ஈகோவால் தான் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தினேஷ் பெற்றோர்கள் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து இருவருக்கும் எப்படி பிரச்சனை ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார்கள். தினேஷ் நடிக்க கூடாது என்று கூறியதால் தான் ரச்சிதா அவரை விட்டு பிரிந்தார் என்று கூறப்படுவது உண்மையா? என்ற கேள்வியை கேட்டுள்ளார் தொகுப்பாளர்.
அதற்கு தினேஷ் தந்தை, அதெல்லம் தவறு, கொரானா சமயத்தில் அவனுக்கு பிரச்சனை என்பதால் வீட்டு வாடகையை 2 மாதம் நீ கட்டிக்கொள் என்று ரச்சிதாவிடம் கூறினோம். அதைத்தான் பூதாகரமாக்கி, அவளை மிஸ் லீட் செய்துள்ளனர். அடுத்தவங்க பேச்சை கேட்டுதான் ஏதாவது ஒன்று சொல்றது, போலிசில் புகார் கொடுத்தது அவசியம் என்ன? எனக்கு சங்கடமாகிவிட்டது.
இருவரும் சரவணன் மீனாட்சியில் நடித்த போது கூட நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் கொடுப்பேன். அப்படி இருக்கும் போது நாங்கள் நடிக்ககூடாது என்று சொல்லவில்லை, நன்றாக தான் பார்த்துக் கொண்டிருந்தோம். தொழில் ரீதியாக இருவருக்கும் எந்த தடங்களும் நாங்கள் கொடுக்கவில்லை.
நாகரீகம் கருதி தான் பல விசயத்தை பேட்டியில் கூறவில்லை என்று தினேஷ் தந்தை கூறியிருக்கிறார். அந்தம்மாகிட்ட நாங்க காசு வாங்கியதே கிடையாது, அவங்க (ரச்சிதா) யார் யாருக்கு கொடுக்குறாங்க என்பதை கேட்டால் பிரச்சனை. சினிமாவில் நடிக்கலாம் ரியல் வாழ்க்கையில் நடிக்கக்கூடாது.
டார்ச்சர் பண்றாரு, பணம் கேட்கிறார் என்று பேட்டியில் ரச்சிதா பேசினார். ஆனால் தினேஷ் அப்படி கிடையாது. போலிஸ் நிலையத்தில் அப்படியெல்லாம் கூறியதெல்லாம் கிடையாது என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்கள் தினேஷின் அப்பா அம்மா.