உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கேமரா முன் நின்ற போது அந்த எண்ணம் வந்தது!! ஓபன்னாக பேசிய ரஜினி பட நடிகை
பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தின் மூலமாக கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. இவர் அந்தாதுன், லஸ்ட் ஸ்டோரீஸ், சோக்ட் முதலிய பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பரவலாக அறியப்பட்டார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராதிகா ஆப்தே," எங்கள் குடும்பம் ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டபோது யாருமே எங்களுக்கு வந்து உதவவில்லை. சமையல் செய்ய சிலிண்டர் கூட இல்லாமல் விறகுகளை எடுத்து குப்பைகளை பொறுக்கி எரித்து அப்படி தான் சமைப்போம்.
ஒரு நல்ல உடையை அணிய முடியவில்லை. ஒரு நல்ல வீட்டில் இருக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது. இந்த மாதிரியான மோசமான சூழ்நிலையில் இருந்து மீட்டெடுத்து சினிமா தான். அந்த சினிமாவுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்.
முதன்முறையாக ஒரு திரைப்படத்தில் நிர்வாண காட்சியில் நடிக்க ஒப்பந்தமாக இருந்தேன். அந்த சமயத்தில் என் மனதில் இருந்தது ஒன்றே ஒன்று தான். சினிமா எல்லாத்தையும் கொடுத்தது அதற்காக என்னால் என்ன கொடுக்கமுடியுமோ அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மற்றப்படி எந்த வருத்தமோ குற்ற உணர்ச்சியோ இல்லை என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.