மோகன்லால் சாரே என்னிடம் கேட்டார், ஆனால் அவர் பெயர் சொல்லமாட்டேன்!! நடிகை ராதிகா..
சினிமாவில் நடிக்க ஆசைப்படும் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்கும் விஷயம் தற்போது அதிகரித்து வருகிறது. அப்படி மலையாள சினிமாவில் தலைவிரித்தாடுகிறது அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை என்று ஹேமா கமிட்டி மூலம் தெரிய வருகிறது.
ராதிகா பத்திரிக்கையாளர் சந்திப்பு
இதுகுறித்து பல நடிகைகள் பேசி வரும் நிலையில், நடிகை ராதிகா பத்திரிக்கையாளர்களை சந்தித்து சில விஷங்களை பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் மோகன்லால் சாரே என்னிடம் கேட்டார், என் படத்தின் செட்டில் நடந்ததா, நான் பேர் சொல்ல விரும்பவில்லை, பெரிய ஆள் செட்டில் இல்லை. நான் அந்த இடத்தில் என்ன பண்ணனுமோ அதை பண்ணினேன்.
ஒருவர் தவறான வீடியோவை வைத்திருப்பதை பார்த்து, மலையாளம் சரியாக பேசமுடியாத சமயத்தில் தெரிந்தவர்களிடம் என்ன அது என்று கேட்டு புரிந்துகொண்டேன். பின் அவரை டெலீட் செய்யச்சொன்னேன். தயாரிப்பு நிறுவனத்திடம் இதுபற்றி கூறினேன்.
இதுபற்றி ஹேமா கமிட்டியிடம் கூறினேன், என் வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் நானே தனியாக சந்தித்து இருக்கிறேன். சில நடிகர்கள் கண்டுக்கொள்வார்கள். அதற்காக பெண்கள் எல்லோரும் போராடிக்கொண்டே இருப்போம் என்று ராதிகா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.