இன்னொருவரை ஏமாற்றி நிலம், கார் வாங்கியிருக்கிறார் ரிஹானா பேகம்!! தொழிலதிபர் வைத்த செக்..
நடிகை ரிஹானா
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை ரிஹானா. பல சீரியல்களில் நடித்து வரும் ரிஹானா, திருமணம் செய்ததை மறைத்து பணம் மோசடி செய்ததாக நடிகை ரிஹானா பேகம் மீது போலிசில் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ராஜ் கண்ணன் என்பவர் அளித்த புகாரில், தன்னுடன் நட்பாகப் பழகி வந்த ரிஹானா ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் விவாகரத்து ஆனதாகவும் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், இதன்பின் ரிஹானாவுக்கு ரூ. 20 லட்சம் வரை பணம் செலவு செய்ததாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து ராஜ் கண்ணன் தன்னிடம் சுமார் 15 லட்சத்துக்கும் மேல் பிசினஸ் டெவலப் செய்ய வாங்கியதாக ரிஹானா தெரிவித்தார்.
தொழிலதிபர் ராஜ் கண்ணன்
சமீபத்தில் தொழிலதிபர் ராஜ் கண்ணன் அளித்த பேட்டியில், என்னை திருமணம் செய்து ரிஹானா மோசடி செய்தார். திருமணம் முடிந்த கையோடு தன்னை இதுபோன்று அச்சுறுத்தி மிரட்டி வருகிறார். நானும் சினிமாத்துறையில் இருந்து வருகிறேன்.
என்னை தவிர்த்து, கோவையிலும் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி அவரிடம் நிலம் மற்றும் கார் ஆகியவற்றை வாங்கியிருக்கிறார் ரிஹானா. என் மீது ஒரு வழக்கு தான் உள்ளது, அந்த வழக்கு முடியும் நிலையில் இருக்கிறது.
ரிஹானா பேகத்தின் மீது மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளேன், விரைவில் நீதிமன்றத்தை நாடி இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார். எனக்கு அவங்க கூட வாழணும் என்றுலாம் இல்லை, அவங்க தான் வாழணும்னு சொன்னாங்க, திருமணம் செய்தோம், செட்டாகவில்லை, நான் பணம் ஏதோ கேட்டுவிடப்போகிறேன் என்பதற்காக மகளிர் ஆணையத்தில் புகாரளித்ததாக ரிஹானா பேகம் பற்றி பேசியுள்ளார் தொழிலதிபர் ராஜ் கண்ணன்.