பல பெண்களை ஏமாற்றி கம்பி எண்ணிய கணவர்!! 48 வயதில் விவாகரத்து செய்யும் ஷில்பா ஷெட்டி..
பாலிவுட் நடிகையான நடிகை ஷில்பா செட்டி, தமிழில் ஒருசில படங்களில் நடித்தும் பிரபலமானார். அதன்பின் 2009ல் ராஜ்குந்த்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் கணவர் ராஜ்குந்த்ரா, பல பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறி ஆபாசமாக வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கினார். அந்த வீடியோவால் பல கோடி பணத்தை சம்பாதித்ததால், ஆபாச படம் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதனால் மனமுடைந்த நடிகை ஷில்பா செட்டி தனியாக வாழ்ந்து வந்தார். கணவர் கைது செய்யப்பட்டதை நினைக்காமல் தன் வேலையை பார்த்து வந்தார் ஷில்பா செட்டி.
இந்நிலையில், ராஜ் குந்த்ரா இணையத்தில், நாங்கள் பிரிந்துவிட்டோம், இந்த கடினமான காலக்கட்டத்தில் எங்களுக்கு நேரத்தை வழங்குமாறு அன்புடன் கேட்கிறோம் என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
இதனால் ஷில்பா செட்டி கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டார் என்றும் அவருக்கு இது தேவை தான் என்றும் ராஜ் குந்த்ராவை விமர்சித்து வருகிறார்கள்.
We have separated and kindly request you to give us time during this difficult period ??
— Raj Kundra (@onlyrajkundra) October 19, 2023