17 வருட பகையா? வடிவேலுவை இத்தனை வருடம் ஒதிக்கி வைத்தாரா சூப்பர் ஸ்டார்..
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவனாக கவுண்டமணி செந்திலுக்கு அடுத்தபடியான லிஜெண்ட் நடிகராக திகழ்ந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு. காமெடி பண்ணாமலே தன் முகப்பாவனையை வைத்து அனைவரையும் சிரிக்க வைப்பார்ர். அப்படி மக்களை சந்தோஷப்படுத்திய வடிவேலுவுக்கு சில பிரச்சனையா, எண்ட்கார்ட் கொடுக்கப்பட்டது. அதிலிருந்து தற்போது மீண்டு வந்த வடிவேலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 வது படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார் வடிவேலுவை இப்படத்தில் நடிக்க வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சும்மார் 17 வருடங்களுக்கு பிறகு இவ்விருவரின் கூட்டணி நடிக்கவுள்ளதாம். அப்படி ஏன் இத்தனை வருடங்களாக ரஜினி வடிவேலுவை ஒதுக்கி வந்தார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்து வந்தது.
ஒரு பேட்டியின் போது ராணா என்ற படத்தில் ரஜினி கமிட்டாகியதை ராணவாவது போணாவாவது என்று கிண்டல் செய்துள்ளாராம் வடிவேலு. இது ரஜினி காதுக்கு செல்ல சங்கடத்தில் இருந்துள்ளாராம். இது ஒரு காரணமா என்று கூறி அப்படி ரஜினி யாரிடமும் இப்படியாக நடந்து கொள்ளமாட்டார்.
சூழ்நிலையால் தான் அவர்கள் இணைந்து படத்தில் நடிக்க முடியாமல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. மெலும் சந்திரமுகி படத்திற்கு பிறகு குசேலன் படத்தில் நடிகர் வடிவேலு நடித்திருந்தாலும் இருவருக்குமான நெருக்கமான காட்சிகள் இல்லை. அப்படி படத்தில் கொடுக்காத காரணமும் தெரியவில்லை.